கிள்ளியூர் ஸ்ரீ பிராட்டீஸ்வரர் சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

கிள்ளியூர் ஸ்ரீ பிராட்டீஸ்வரர் சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

கிள்ளியூர் | ஏப்ரல் 25, 2026: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிராட்டீஸ்வரர் சிவன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த வியாழக்கிழமை (23-04-2026) பக்திப் பரவசத்துடன் மிக விமரிசையாக நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் மற்றும் புனித நீராட்டு

கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு யாகசாலையில் வேதிகா அர்ச்சனை, அக்னி காரியம் மற்றும் மூல மந்த்ர ஜெப ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைக்குப் பிறகு, புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கல இசை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் அமைந்த சுபவேளையில், சிவாகம முறைப்படி மூலாலய விமான கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “தென்னாடுடைய சிவனே போற்றி” என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னிலை மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல்

இந்த ஆன்மீகப் பெருவிழாவினை தேவிகோடு மடம், பிரசன்னதிலகம், வாஸ்து ஜோதிட நிபுணர் Dr. T.T. அதிபன்ராஜ் BBA., BA (Vastu) M.A. அவர்கள் தலைமை தாங்கி முன்னின்று நடத்தி வைத்தார்.

கும்பாபிஷேக வைபவங்களை சிவாகம கிரியா விசாரத்த, கும்பாபிஷேக கலாரத்னம், ஸ்ரீ சிவ பத்ரகாளி அம்பிகா உபாசகர் வாமதேவ சிவம் சிவ ஸ்ரீ K. சிவபாலன் சுவாமிகள் ஆகம விதிகளின்படி செம்மையாக நடத்தி வைத்தார்.

மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை

கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, மதியம் 12.00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் அலங்கார தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிள்ளியூர் பகுதி பொதுமக்கள் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிள்ளியூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

0 Comments

மறுமொழி இடவும்

Your email address will not be published. Required fields are marked *